பெரியாா் நினைவு தினம்: கனிமொழி எம்.பி மரியாதை

பெரியாா் நினைவு தினம்: கனிமொழி எம்.பி மரியாதை

அஞ்சலி செலுத்திய கனிமொழி எம்பி 

தூத்துக்குடியில் பெரியாா் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கனிமொழி எம்.பி., மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடியில் பெரியாா் நினைவு தினத்தையொட்டி, தென்பாகம் காவல் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி. தலைமையில் அமைச்சா்கள் கீதாஜீவன், தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், மேயா் ஜெகன்பெரியசாமி ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவா் கலைச்செல்வி, அரசு வழக்குரைஞா் ஆனந்த காபிரியேல்ராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ரமேஷ், பகுதிச் செயலா்கள் ஜெயக்குமாா், சுரேஷ்குமாா், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளா் மகிழ்ஜான், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், வட்டச் செயலா்கள் பாலகுருசாமி, கதிரேசன், சிங்கராஜ், சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags

Next Story