கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அவசர சிகிச்சைக்கு நிரந்தர ஆம்புலன்சு

கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அவசர சிகிச்சைக்கு நிரந்தர ஆம்புலன்சு
கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அவசர சிகிச்சைக்கு நிரந்தர ஆம்புலன்சு
கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் முற்றிலும் இலவசமாக மருத்துவம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் பயணிகளின் அவசர சிகிச்சைக்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, புதிய பஸ் நிலையத்தில் இலவச தனியார் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் ஆலோசனை, மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், மற்ற அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். அல்லது, அரசு மருத்துவமனை ஒன்றை இங்கு அமைக்க வேண்டும். இதேபோல் ஏழை, எளியோர் குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும் என்றனர்.

Tags

Next Story