நீடிக்கும் மழை : பேச்சிப்பாறை அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு.

நீடிக்கும் மழை : பேச்சிப்பாறை அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு.

பேச்சிப்பாறை அணை

குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் சாரல் மழை பெய்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது.மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 46 அடியை எட்டியதால் அணையில் இருந்து மறுகால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.பின்னர் நீர்வரத்து குறைந்தநிலையில் மறுகால் மூடப்பட்டது. பாசன கால் வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த நிலையில் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் அந்த நீரும் நிறுத்தப்பட்டது இதனிடைய மலையோர பகுதியில் மீண்டும் மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிபாறை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Tags

Next Story