விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

புதுப்பட்டி பிரிவு சாலை அருகே பைக் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் ஓட்டுனர் உயிரிழந்தார்.
விராலிமலை ஒன்றியம் ஆவூர் அருகே உள்ள குளவாய்பட்டியை சேர்ந்தவர் தர்மதுரை (32). தச்சுத்தொழிலாளி. கடந்த 19ம் தேதி இலுப்பூரில் இருந்து தனது தாயுடன் பைக்கில் வீட்டுக்கு சென்றுக் கொண்டி ருந்தார். ஆவூர் அருகே வடக்கு புதுப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது பைக் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தர்மதுரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். விபத்து குறித்து மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story