வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவர் கைது

வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவர் கைது

காவல் நிலையம் 

சிவகங்கையில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை பேருந்து நிலைய பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக சிவகங்கை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முக பிரியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சிவகங்கை பேருந்து நிலைய பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது சித்தாலங்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் மகாராஜன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு வைத்திருந்தது தெரியவந்த நிலையில் அவரிடமிருந்து 11 வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story