கீரனூர் பகுதியில் புகையிலை விற்பனை செய்த நபர் கைது

கீரனூர் பகுதியில் புகையிலை விற்பனை செய்த நபர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை

கீரனூர் பகுதியில் புகையிலை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

கீரனூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அய்யப்பா நகரில் ஆய்வு செய்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து புகையிலை விற்பனை செய்த சுப்பிரமணியன் (46) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 26 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

Tags

Next Story