கிணற்றின் சுவர் மீது தூங்கியவர் தவறி விழுந்து பலி!

கிணற்றின் சுவர் மீது தூங்கியவர் தவறி விழுந்து பலி!

பைல் படம் 

கலவை அருகே கிணற்றின் சுவர் மீது தூங்கியவர் உள்ளே தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள கலவை புதூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் கோகுல் (30).இவர் அவரது வீட்டின் அருகே உள்ள தெரு கிணற்றின் சுவர் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது தூக்க கலக்கத்தில் கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனை அறிந்ததும் அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி கோகுலை பிணமாக மீட்டு கலவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர்,போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags

Next Story