பணகுடியில் அனுமதி இன்றி செம்மண் கடத்தியவர் கைது

பணகுடியில் அனுமதி இன்றி செம்மண் கடத்தியவர் கைது

பைல் படம்

நெல்லை மாவட்டம் பணகுடி வீரபாண்டியன் விலக்கு அருகே செம்மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பணகுடி வீரபாண்டியன் விலக்கு அருகே காவல் உதவி ஆய்வாளர் முருகேஷ் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது நதிப்பாறையை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் உரிய அனுமதி சீட்டு இன்றி சட்டவிரோதமாக செம்மண்ணை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து செம்மண்ணை ஏற்றி வந்த சுரேஷை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Tags

Next Story