அத்துமீறி கள் விற்றவர் கைது

அத்துமீறி கள் விற்றவர் கைது

 குமாரபாளையம் அருகே அத்துமீறி கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் அருகே அத்துமீறி கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் ரோந்து சென்ற போலீசார் அங்கு கள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சின்னன், 55, என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து ஒரு லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story