மானூர் அருகே சரல் மண் திருடியவர் கைது

மானூர் அருகே சரல் மண் திருடியவர் கைது

பைல் படம்

மானூர் அருகே அத்துமீறி சரல் மண் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் ராபினா மரியம் தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எட்டான்குளம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய அனுமதியின்றி சரல் மண் ஏற்றி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநரான குப்பனாபுரத்தைச் சேர்ந்த ஈசாக்(38) கைது செய்ததோடு, 2 யூனிட் சரல் மண்ணுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story