ஆட்டோவில் பட்டாக்கத்தி வைத்திருந்தவர் கைது

ஆட்டோவில் பட்டாக்கத்தி வைத்திருந்தவர் கைது

பட்டா கத்தி வைத்திருந்தவர் கைது


திருவள்ளூரில் ஆட்டோவில் பட்டாக்கத்தி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்க எஸ்.பி., சீனிவாச பெருமாள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவர்களது வீடுகளில் சோதனை செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் முதல் மூன்று நாட்கள் திருவாலங்காடு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் பழைய குற்றவாளிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உள்ளதா என்பது குறித்தும் சோதனை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பழையனுார் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், பட்டாக்கத்தி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பட்டாக்கத்தியை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவை ஓட்டி வந்த திருவாலங்காடு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சந்துரு, 21, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story