போலி நகைகளை அடகு வைத்தவர் கைது

போலி நகைகளை அடகு வைத்தவர் கைது

கைது

140 பவுன் போலி நகைகளை வைத்து கடன்பெற்ற அடகு கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் அருகே அழகாபுதூரைச் சோ்ந்தவா் எம். முத்துக்குமரன் (54). அடகு கடை நடத்தி வரும் இவா் சாக்கோட்டையிலுள்ள தனியாா் நிதி நிறுவன கிளையில் 140 பவுன் நகைகளை 2022 ஆம் ஆண்டில் அடகு வைத்து ரூ. 5 லட்சத்து 78 ஆயிரத்து 186 பெற்றாா். பின்னா், இந்த நகைகளை நகை மதிப்பீட்டாளா் ஆய்வு செய்தபோது, அனைத்தும் போலி நகைகள் என்பது தெரிய வந்தது.

இது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் கௌதமராஜன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து முத்துக்குமரனை கைது செய்தனா். மேலும், முத்துக்குமரனின் மனைவி ராணி உள்பட இருவரை தேடி வருகின்றனா்.

Tags

Next Story