தோட்டத்திற்கு குளிக்கச் சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி

தோட்டத்திற்கு குளிக்கச் சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி

பலியானவர்

விருதுநகர் அருகே தோட்டத்திற்கு குளிக்கச் சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் சந்திர ரெட்டிய பட்டிபகுதியைச் சார்ந்தவர் மாரிச்சாமி வயது 57 இவரது மனைவி மைசூரில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதைப்போல் இவருடைய மகன் துபாயில் பணிபுரிந்து வருவதாகவும் இவருடைய மகள் ஹரிணி தேவி என்பவர் கல்லூரி கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று மாரிச்சாமி என்பவர் தனது தோட்டத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார் .

வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராத காரணத்தினால் அவருடைய மகள் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பொழுது அதை அவர் எடுக்கவில்லை இது குறித்து அவருடைய உறவினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது மாரிச்சாமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது.

இதை எடுத்து இது குறித்து காவல்துறைக்கும் மின்சாரத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த மின்சார துறையினர் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மாரிசாமியின் உடலை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர் இந்த சம்பவக் குறித்து ஹர்னி தேவி அளித்த புகாரின் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story