பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

சொர்க்கவாசல் திறப்பு

மல்லசமுத்திரத்தில் உள்ள அழகராய பெருமாள் மற்றும் காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகராயபெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி திதியை முன்னிட்டு, அதிகாலை 4மணிக்கு மங்களஇசை, சுப்ரமாதபாதம் நடந்தது. 4.30மணிக்கு, விஷ்வக்சேன ஆராதனை, புண்யாகம் நடந்தது. 5மணிக்கு, சுவாமி புறப்பாடு, வைகுண்ட வாசல் அருகே எழுந்தருளினார். 5.30க்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. 6மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. 2ஆயிரம் லட்டுகள் தயாரிக்கபட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மூலவருக்கு மூன்று கிலோவில் லட்டு வைத்து படைக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல், காளிப்பட்டியில் அமைந்துள்ள சென்றாய பெருமாள் கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில், அதிகாலை 5மணிக்கு, சென்றாய பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார், வீரபக்த ஆஞ்சநேயருடன் சொர்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் மணிகண்டன், அறங்காவலர் சுப்ரமணியன் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story