கோவிலில் உண்டியலை உடைத்து தூக்கி சென்ற மர்ம நபர்கள்!

கோவிலில் உண்டியலை உடைத்து தூக்கி சென்ற மர்ம நபர்கள்!

கோப்பு படம்

பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் உள்ள பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் அமைந்துள்ளது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்ததோடு உண்டியலும் மாயமாகி உள்ளது.

தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கோவிலுக்கு அருகிலுள்ள ஊராட்சி அலுவலகம் அருகே உடைந்த நிலையில் உண்டியல் கிடந்தது. மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு, உண்டியலை வீசிச்சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நெமிலி போலீசார் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உடைக்கப்பட்ட உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story