பெருமாள் கோவில் கொடிமர கும்பாபிஷேகம்

பெருமாள் கோவில் கொடிமர கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

ராமநாதபுரம், இந்து பரிபாலன சபை மற்றும் பொதுமக்கள் சார்பில் தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோயிலில் கொடிமர கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராமநாதபுரம், தொண்டியில் உள்ள ஸ்ரீ தேவி, பூ மாதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோயில் கொடிமரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று காலை யாகசாலை பூஜை நடைபெற்றது. அதையடுத்து மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 12 வகை அபிஷேகம் நடைபெற்து. புனித நீர் கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்து கொடிமரத்திற்க்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடைபெற்று சாமி உலா நடைபெற்றது. இந்து பரிபாலன சபை தலைவர் ராஜசேகர், மணி, ராஜா, செயல் அலுவலர் பாலாஜி உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story