4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹந்த் மஸ்தூர் சபா தமிழ்நாடு கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலன் கருதி பொங்கல் ஊக்கத் தொகையாக ரூபாய் 2000 வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் நல வாரியம் மூலம் நான்கு லட்சம் வரை வீடு கட்டும் திட்டத்தில் எளிய நடைமுறையினை பயன்படுத்த வேண்டும். கல்வி உதவித்தொகை உயர்த்தியும், ஆண் பெண் வேறுபாடு பார்க்காமல் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை சமமாக வழங்க வேண்டும். உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.

Tags

Next Story