பேரிகாடுகளை அகற்ற வியாபாரிகள் கோரிக்கை மனு

பேரிகாடுகளை அகற்றக் கோரி வியாபாரிகள் பொதுமக்கள் காவல்துறை ஆய்வாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

திருச்செங்கோடு முக்கிய வீதிகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகாடுகளை அகற்றக் கோரி அனைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் திருச்சங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர். திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளில் காவல்துறை சார்பில் பேரி கார்டுகள் வைக்கபட்டு இருந்தது.பண்டிகை நாட்களில் பேரிகார்டுகள் அகற்றபட்டு பண்டிகை முடிந்ததும் வைக்கபடுவது வழக்கம், பேரிகார்டுகள் இருந்தால் தங்களது வியாபாரம் பாதிக்கபடுவதாக வியாபாரிகளின் கோரிக்கை ஏற்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பேரிகார்டுகள் அகற்றபட்டது.

போக்குவரத்தில் முரண்பாடுகள் ஏற்படுவதால் காவல்துறை சார்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் பேரிகார்டுகள் வைக்கபட்டது.பேரிகார்டுகள் வைக்கபட்டதால் மீண்டும் தங்களது வியாபாரம் பாதிக்கபட்டதாக அனைத்து வியாபாரிகளும் மீண்டும் பேரிகார்டுகள் அகற்றபட வேண்டும் என நகர காவல் ஆய்வாளர் மகேந்திரினிடம் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் மகேந்திரன் மாவட்ட கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்து பின்னர் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கூறினார்.

Tags

Next Story