நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

வருமான வரி த்துறை அதிகாரி

பிணையில் விடுவிக்கப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் கடந்த ஆண்டு, டிச. 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.இந்த நிலையில், அங்கித் திவாரி தரப்பில் நீதிமன்றத்தில் கையொப்பமிடுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி,

திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு 3-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஜெ. மோகனா உத்தரவிட்டாா்.

Tags

Read MoreRead Less
Next Story