பஞ்சாயத்து செயலாளரை மாற்ற மனு

பஞ்சாயத்து செயலாளரை மாற்ற மனு

பஞ்சாயத்து செயலாளரை மாற்ற மனு

சேலம் மாவட்டம், கோக்கலை ஊராட்சியில் கொலை வழக்கில் சிறை சென்ற பஞ்சாயத்து செயலாளரை மாற்ற பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்

நாமக்கல் மாவட்டம்,கோக்கலை கிராமத்தில் பணிபுரிந்துவரும் பஞ்சாயத்து செயலாலரை மாற்றிவிட்டு, வேறு செயலாளரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பழனிவேல் தலைமையில் எலச்சிபாளையம் பி.டி.ஓ, மலர்விழியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கோக்கலை கிராமத்தில் பஞ்சாயத்து செயலாளராக பணிபுரிந்துவரும் செல்வகுமார் என்பவர், கொலை வழக்கில் சிறையில் இருந்தவர். இவரை உள்ளாட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தும் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசின் கோப்புகளை இவர்தான் கையாண்டு வருகிறார். எனவே, வேறு செயலாளரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.

மேலும், எளையாம்பாளையம், கோணக்காடு, குறுக்குபுரம் வழியாக ஒருகிலோ மீட்டர் தொலைவிற்கு ஜல்லிசாலையாக உள்ளதால் குண்டும், குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்லமுடியாத சூழல் உள்ளது. ஆகவே, இச்சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட பி.டி.ஓ.,மலர்விழி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags

Next Story