இறந்த கணவரின் நகை, பணத்தை மீட்டுத் தரக்கோரி மனைவி மனு

இறந்த கணவரின் நகை, பணத்தை மீட்டுத் தரக்கோரி  மனைவி மனு

 மருதம்பாள்

இறந்த கணவர் உறவினர்களின் தொழிலுக்காக கடனாக கொடுத்த நகை, பணத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதம்பாள் இவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார் அதனை தொடர்ந்து அவர் தெரிவித்த போது, தனது கணவர் சென்னையில் சமோசா கடை நடத்தி வருவதாகவும், கணவரின் உறவினரான பாக்கியம் மற்றும் பிரவிணா ஆகியோருக்கு பணம் தேவைப்பட்டதால் அவர்களுக்கு கணவர், தன்னிடமிருந்த நகை 7 பவுன் நகை மற்றும் 4 லட்சம் பணத்தை கொடுத்தார் , மீண்டும் பணத்தை கேட்டபோது அவர்கள் தர மறுத்து நாள் கடத்தி வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாகியும் பணம் தராததால், கடந்த இரண்டு மாதம் முன்பு மன விரக்தியில் இருந்த தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், எனவே இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமம் அடைந்து வரும் தனக்கு கணவர் மூலம் கொடுத்த நகை பணத்தை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story