செங்கம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாஜக சார்பில் மனு

செங்கம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாஜக சார்பில் மனு

மனு அளித்தவர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக இளைஞரணி சார்பில் செங்கம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், செங்கம் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகள் உட்பட கால்நடைகளை பிடிக்க வேண்டும், பொது மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை பிடிக்க வேண்டும், துப்புரவு பணி முழுமையாக செயல்படுத்திட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பிஜேபி இளைஞர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

செங்கம் பேரூராட்சி அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரமேஷ் தலைமையில் பாஜகவினர் செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் பேரூராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பாஜக நிர்வாகிகள் ராஜேந்திரன், சேகர், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், பழனிவேல்ராஜன், பிரேம்குமார் உள்பட பாஜக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story