குமார்பளையம் நகராட்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு

குமாரபாளையம் நகராட்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தம்மண்ணன் சாலை, பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து, பள்ளிபாளையம் சாலை வரை குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி நிறைவு பெற்று, மண் திட்டுக்களாக உள்ளதால், சாலையின் அகலம் குறைந்துள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு கொடுக்கப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குமாரபாளையம் நகராட்சி 30 வது வார்டு ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகிலிருந்து, பெரிய மாரியம்மன் கோவில்வரை உள்ள சாலையில் சாக்கடை பராமரிப்பு செய்வதற்காக சாலையில் குழாய் பதிக்கும் நடைபெற்று வந்தது.

தற்போது அந்த பணிகள் முடிந்த நிலையில் சாலையில் அகலம் குறையப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அருகிலிருந்து வாகனங்கள் சாலையில் வந்தால், எதிரே வேறு எந்தவொரு வாகனமும் செல்ல முடியாது .பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

ஆகையால் தாங்கள் பொதுமக்களின் நலன் கருதி அந்த இடத்தினில் ஆய்வு செய்து சாலையை அகலப்படுத்திக்கொடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

Tags

Next Story