நாய்களை பிடிக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு

நாய்களை பிடிக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு
நாய்கள் பிடிக்க வலியுறுத்தல்
குமாரபாளையத்தில் நாய்களை பிடிக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தாளபேட்டை பகுதியில் வசிப்பவர்கள் விமலா, மாதேஸ்வரன் தம்பதியர். இவரது 2 வயது மகள் ஹரிணியை, அப்பகுதியில் உள்ள நாய் ஒன்று முகம் உள்ளிட்ட பல இடங்களில் கடித்தது. நகரில் இது போல்வெறி பிடித்த நாய்கள் பல உள்ளது.

இதனால் பொதுமக்கள் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவைகளை பிடித்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், நகராட்சி ஆணையாளர் சரவணனிடம் புகார் மனு கொடுத்தனர். நிர்வாகிகள் விமலா, உஷா, சூர்யா, கார்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story