மனு கொடுக்கும் போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டம்

நிலக்கோட்டையில் விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

நிலக்கோட்டையில் விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

நிலக்கோட்டையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம், ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காசிமாயன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.தொடர்ந்து அனைவரும் நால்ரோடு, மார்க்கெட், அணைப்பட்டி சாலை வழியாக நிலக்கோட்டை மின்பகிர்மான வட்டார அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மின் பொறியாளரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story