கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடு வேண்டி ஆட்சியரிடம் மனு

பென்னாகரத்தை சேர்ந்த மாதம்மாள் என்பவர் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடு வேண்டி ஆட்சியரிடம் குடும்பத்துடன் மனு அளித்தார்.
இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் வீடு வழங்க வேண்டி ஆட்சியரிடம் மாதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் மனு வழங்கி உள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கே புதூர் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த மாதம்மாள் அந்தப் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக மேல் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர் எனவே எனது கணவர் ஊனமுற்றோர் அவர் எனவே தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு தேர்வு செய்யப்பட்டு வீடு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த மனுவினை மாதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் சாந்தியிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story