ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துமுகாம் நடத்த மனு

ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துமுகாம் நடத்த மனு

ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துமுகாம் நடத்த கலெக்டர் அலுவகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் நகர்பகுதியை சமூக ஆர்வலர் சுகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தார். அந்த மனுவில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்வதாகவும், எனவே அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்துசமய அறநிலைய துறையும் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என வலியுறுத்தபட்டு இருந்தது.

இதனையடுத்து அவர் அந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்று வழங்கி சென்றார்.

Tags

Next Story