பஞ்சமி நிலங்களை மீட்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

பஞ்சமி நிலங்களை மீட்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

நிலங்களை மீட்க மனு

பஞ்சமி நிலங்களை மீட்க தலித் விடுதலை இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்துக்குட்பட்ட. இரும்பிலி கிராமத்தில் உள்ள தலித் சமூகத்தைச் சார்ந்த.சதாசிவம் என்பவரின் நிலத்தை வருவாய்த்துறை. கைப்பற்றுவதை உடனடியாக நிறுத்த கோரியும். இரும்பலி ஊரில் உள்ள 300 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்கவும் இன்று. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இடத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் N.A.கிச்சா தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அவைத்தலைவர் த. மூக் நாயக். மாநில மகளிரணி செயலாளர் தலித் நதியா. மாவட்டத் தலைவர் N. அமுல்சாமி. மாவட்டச் செயலாளர். தலித் K. ஜெயக்கொடி. போளூர் ஒன்றிய தலைவர் R. மார்க் பந்த். மற்றும் சி பி ஐ (ML) மாவட்ட செயலாளர் N. ஆறுமுகம். தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story