கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி மனு

கிணறில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு செட்டிநாயக்கன்பட்டி மக்கள் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது செட்டிநாயக்கன்பட்டி. செட்டிநாயக்கன்பட்டி காந்தி நகரில் 500 பேர் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். காந்திநகரில் உள்ள கிணறுதான் இவர்களுக்கு பிரதான நீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செட்டி நாயக்கம்பட்டி ஊராட்சியில் கழிவு நீர் சாக்கடை கட்டுவதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் கழிவு நீர் வாய்க்காலை மழை நீர் வாய்க்காலோடு இணைத்ததால் அந்தக் கழிவு நீர் காந்தி நகரில் உள்ள கிணற்றில் கலக்கிறது. ஹாய் ஆல் கிணற்று நீரை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் நீர் ஆதாரத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால் நோய் பரவும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story