காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி எஸ்பியிடம் மனு

காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி எஸ்பியிடம் மனு

சாமுண்டீஸ்வரி 

தனது காதல் கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.

விருதுநகர் அருகே நடுவபட்டியை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. இவருக்கு தாய் மற்றும் ஒரு தம்பி உள்ளார். இவர் பி.எட் படித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரை காதலித்து வந்து உள்ளார். இந்த நிலையில் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நாகராஜ் வீட்டில் இவர்களின் காதலை ஏற்க மறுத்ததால் சாமுண்டீஸ்வரி மற்றும் நாகராஜன் இருவரும் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் நாகராஜனுக்கு அரசு வேலை கிடைத்து உள்ளது. இந்த நிலையில் நாகராஜன் அவருடைய தாய் மற்றும் பாட்டியின் வற்புறுத்தலால் சாமுண்டீஸ்வரி விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் தன்னுடைய கணவரை சேர்த்து வைக்கும் படி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாமுண்டீஸ்வரி புகார் செய்து உள்ளார். இந்த நிலையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததை அடுத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாமுண்டீஸ்வரி தன்னுடைய கணவரை சேர்த்து வைக்கும்படி மனு அளித்தார்.

Tags

Next Story