இலங்கையில் உயிரிழந்த வார்டு உறுப்பினர் உடலை மீட்க ஆட்சியரிடம் மனு

இலங்கையில் உயிரிழந்த வார்டு உறுப்பினர் உடலை மீட்க ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்த குடும்பத்தினர் 

இலங்கையில் உயிரிழந்த சேதுராயன் குடிக்காடு ஊராட்சி வார்டு உறுப்பினரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் தீபக் ஜேக்கபிடம் அவரது குடும்பத்தினர் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள சேதுராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்சாமி(55).சேதுராயன் குடிக்காடு ஊராட்சி வார்டு உறுப்பினர். இவருக்கு மனைவி, மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், ஜூன் 29-ம் தேதி கம்போடியா நாட்டுக்கு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். இலங்கை விமான நிலையத்தில் இறங்கி, காத்திருப்பு அறையில் இருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, இலங்கை விமான நிலைய அதிகாரிகள், கோபால் சாமியின் குடும்பத்தினரை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோபால்சாமி மனைவி சுகுணா உள்ளிட்டோர். தனது கணவர் உடலை தாயகம் எடுத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் நேற்று மனு அளித்தனர்.



Tags

Next Story