உளுந்து விலையை குறைக்க கோரி மத்திய அமைச்சர் ராஜநாத்சிங்கிடம் மனு

உளுந்து விலையை குறைக்க கோரி மத்திய அமைச்சர் ராஜநாத்சிங்கிடம்  மனு
X

மத்திய அமைச்சரிடம் மனு அளிப்பு 

உளுந்து விலையை குறைக்காவிடில் அப்பளம் தொழில் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில், அப்பளம் முக்கியமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு இது நிறைய வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

இது மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியில் இருந்து அதிக அந்நியச் செலாவணியைக் கொண்டுவருகிறது. சமீபகாலமாக, அப்பளம் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளான உளுந்த பருப்பின் விலை மிகவும் அதிகமாக உள்ளது, எனவே இந்தத் தொழில் நெருக்கடியை சந்தித்து மூடும் தருவாயில் உள்ளது. எனவே உணவுப்பொருள் பாரத் பருப்பு திட்டம் மூலமாகவும் உணவு மற்றும் பொது ,

விநியோகத் துறையின் மூலமாகவும் மானிய விலையில் உளுந்து பருப்பை வழங்குவதன் மூலம் அப்பளம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 50000 மேற்பட்ட சிறு தொழில்களும் காப்பாற்றப்படுவது மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் இருக்கின்ற 7 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் நிரந்தர வேலைக்கு உத்தரவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

எனவே மத்திய அரசு உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சந்தித்து தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாநில தலைவர் திருமுருகன் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story