வாணியம்பாடியில் ஸ்வீட்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

வாணியம்பாடியில் ஸ்வீட்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கடை

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்வீட்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் ஸ்வீட் கடையில் இரவு 11 மணிக்கு கடை செயல்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தயாராக கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டுகளை பற்ற வைத்து கடைக்குள் சென்று வீசி உள்ளனர்.

மூன்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகள் கடையில் வீசப்பட்ட நிலையில் அதில் ஒரு பெட்ரோல் குண்டு மட்டும் வெடித்து சிதறியுள்ளது மீதமுள்ள இரண்டு பெட்ரோல் குண்டுகளை பாதுகாப்பாக அனைத்து மீட்ட காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து விசாரணைக்காக கொண்டு சென்றனர். மேலும் அச்சமயம் கடையில் ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்த நிலையில் அதை தடுக்க முயன்ற பொழுது அவரை மிரட்டி அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

கடையில் தீப்பற்றி எரியவே கடையில் இருந்த ஊழியர் நந்தகுமார் தீயை அணைக்க முயன்ற பொழுது லேசான தீக்காயம் அடைந்துள்ளார் சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சுதாரித்து தீயணைப்பு துறைவிற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்தில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்மநர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story