புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கைது 

அன்னவாசலில் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் சித்துப்பட்டி பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பெட்டிக்கடை உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த சுதாகரன் வயது (26) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.




Tags

Next Story