மாத்திரையை‌ தூக்கி எறியும் மருந்தாளுநர்; நோயாளிகள் அவதி

மாத்திரையை‌ தூக்கி எறியும் மருந்தாளுநர்;  நோயாளிகள் அவதி

தேவகோட்டை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் மாத்திரையை தூக்கி எறிவதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.  

தேவகோட்டை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் மாத்திரையை தூக்கி எறிவதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் தேவகோட்டையை சுற்றி உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு பணிபுரியும் பார்த்திபன் என்ற மருந்து ஆளுநர் (அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரை எடுத்துக் கொடுக்கும் பணி செய்பவர்) அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மாத்திரை சீட்டை பெற்றுக் கொண்டு அதற்குரிய மாத்திரைகளை வேண்டா வெறுப்பாக தூக்கி எறியும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இப்பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story