தேனி மாவட்டத்தில் 42 முறை இரத்த தானம் வழங்கியுள்ள மருந்தாளுநர்

தேனி மாவட்டத்தில் மருந்தாளுநர் ஒருவர் 42 முறை இரத்த தானம் வழங்கி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏர்படுத்தி வருகிறார்.
தேனி மாவட்டம் சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டத்தில் மருந்தாளுநராக உள்ள ரஞ்சித்குமார் , இதுவரை 42 முறை இரத்ததானம் வழங்கி பலருக்கும் உதவி உள்ளார். ' ஏ ' பாசிட்டிவ் இரத்த வகை உள்ள இவர் கடந்த 17 ஆண்டுகளாக இரத்த தானம் செய்து வருகிறார். பல்வேறு இரத்ததான முகாம்கள் நடத்தி பொது மக்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தேனி மாவட்டத்தில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 37 குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை இரத்தம் மாற்று சிகிச்சைக்குத் தேவையான இரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

Tags

Next Story