தர்மபுரியில் 3ம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை முதல் துவக்கம் !

தர்மபுரியில் 3ம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை முதல் துவக்கம் !

நீச்சல் பயிற்சி

தர்மபுரியில் இரண்டு கட்டங்களாக நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி குறித்து தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில்,மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலக்கியம்பட்டி பகுதியில் அமைந்துள்ள நேதாஜி நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது மூன்றாம் கட்டமாக நாளை 27ஆம் தேதி முதல் துவங்க உள்ளது இதில் நாளை முதல் மே மாதம் எட்டாம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறும் பயிற்சி கட்டணமாக ஒரு நபருக்கு 1,770 ரூபாய் வசூலிக்கப்படுகிறது பெண்களுக்கு தனி பயிற்சி வழங்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தகவலுக்கு நேதாஜி நீச்சல் குளத்தை நேரடியாக அணுகலாம் மேலும் இந்த வாய்ப்பினை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story