பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தைத்திருவிழா தேரோட்டம்

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தைத்திருவிழா தேரோட்டம்
தேர் வடத்தை இழந்து தொடங்கிய எம் , பி எம் எல் ஏ முன்னாள் மத்திய அமைச்சர்
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தைத்திருவிழா தேரோட்டம் நடந்தது.

குமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி-சிவகாமி அம்மன் கோவிலில் தைத்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து விநாயகரையும், சுவாமியையும், அம்மனையும் தேரில் எழுந்தருள செய்தனர்.

பின்னர் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழாவில் விஜய் வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

10-ம் திருவிழாவான நாளை (25-ந்தேதி) காலை 10 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மேல் ஆராட்டு வைபோக நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு ஸ்ரீ கன்னி விநாயகர் தூத்துவாரி அம்மன் கோவிலில் இருந்து சுவாமியும் அம்மாளும் தெப்போற்சவம் புறப்படும் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags

Next Story