கடலூரில் புகைப்பட கண்காட்சி

கடலூரில் புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர்

கடலூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக கடலூர், மஞ்சக்குப்பம் டவுன்ஹால் திறந்தவெளி அரங்கில் எல்லோருக்கும் எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அரசு துறைகள் ஒருங்கிணைந்து புகைப்படக் கண்காட்சி மற்றும் துறை சார்ந்த அரங்குகள் அமைக்கபட்டிருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து துறை சார்ந்த அரங்குகளை பார்வையிட்டார்.

உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மாநகராட்சி துணைமேயர் பா. தாமரைச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story