அருங்காட்சியகத்தில் கலைஞரும் உழவர் சந்தையும் என்ற கண்காட்சி

அருங்காட்சியகத்தில் கலைஞரும் உழவர் சந்தையும் என்ற கண்காட்சி

புகைப்பட கண்காட்சி 

திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புகைப்பட‌ கண்காட்சி நடைபெறுகிறது.

முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அவற்றுள் ஒன்றாக நேற்று (பிப்.29) கலைஞரும் உழவர் சந்தையும் என்ற தலைப்பில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி செய்திருந்தார்.இந்த மாதம் முழுவதும் இந்த கண்காட்சி நடைபெறும் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story