தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நல திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

நலத்திட்ட உதவிகள்

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நல திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நல திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்து பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி , கூடுதல் ஆட்சியர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர்,செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் , மறைமலைநகர் நகர மன்ற தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அரசு உயர் அதிகாரிகள் ,பள்ளி ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், மாணவ /மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story


