சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் புகைப்பட கண்காட்சி

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் புகைப்பட கண்காட்சி

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் புகைப்பட கண்காட்சி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் புகைப்பட கண்காட்சி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் புகைப்பட கண்காட்சி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இக்கண்காட்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பூர்ணிமா தலைமை தாங்கி கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். நீதிபதிகள் பாக்கியஜோதி, வெங்கடேசன், ராஜசிம்மவர்மன், ஜெயப்பிரகாஷ், புஷ்பராணி, தமிழ்ச்செல்வன், சுபத்ரா, ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கண்காட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்டம் சார்ந்த மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக பல புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை நீதிமன்ற அனைத்துநிலை பணியாளர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் பார் வையிட்டனர். இதற்கான ஏற்பாட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான ஜெயப்பிர காஷ் மேற்பார்வையில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக உதவியாளர்கள் மற்றும் தன்னார்வத்தொண்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story