முன்னாள் படைவீரர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் பணி வாய்ப்பு

முன்னாள் படைவீரர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் பணி வாய்ப்பு

ஆட்சியர்

இந்திய ராணுவத்தில் 6 மாதகாலம் சிறப்பு உடற்பயிற்சி கல்வி பயின்ற முன்னாள் படை வீரர்களுக்கு, உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படுகின்றது என தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் அவர்கள்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய ராணுவத்தில் 6 மாதகாலம் சிறப்பு உடற்பயிற்சி கல்விபயின்ற முன்னாள் படை வீரர்களுக்கு, உடற்பயிற்சி பணிக்கு உதவிடும் வகையில், காரைக்குடி யில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் வாயிலாக 4 மாத காலம் சிறப்பு உடற்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

எனவே ஏற்கனவே 6 மாதம் மற்றும் 4 மாதம் என மொத்தம் 10 மாத காலம் பயிற்சி பெற்றால், உடற்கல்வி ஆசிரியராக பணி நியமனம் வழங்க ஏதுவாக அமையும். மேலும், இப்பயிற்சியில் சேர விருப்பமும் மற்றும் படைப்பணியில் 6 மாத காலம் சிறப்பு உடற்பயிற்சி கல்வி முடித்த தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள், உரிய ஆவணங்களுடன் தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை பெற்று பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தொலை பேசி எண்:04342-297844 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story