ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் - 83 பேர் கைது

ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் - 83 பேர் கைது

மறியல் போராட்டம் 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர், ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். போராட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ், காளிமுத்து தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். பல்வேறு சங்க நிர்வாகிகள் பிச்சை, மிக்கேலம்மாள், வாசுகி, வேல்முருகன், அப்துல்லா, சுரேஷ்குமார், சங்கர சுப்பிரமணியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 83பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story