பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம்

பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம்

மறியல் 

நத்தம் பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட ஓய்வுபெற்றோர் நல அமைப்பை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதற்கு செயலர் கோபால் தலைமை வகித்தார். மறியலில் 100 மாதமாக ஓய்வூதியர்களுக்கு வழங்கபடமால் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து கோஷங்கள் எழுப்பபட்டது. பின்னர் பேருந்தில் நிலையத்தில் இருந்த பேருந்தை மறித்தனர். இதையொட்டி 31 பேர்களை நத்தம் போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.இந்த போராட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் அழகர்சாமி, மத்திய சங்க துணை பொது செயலாளர் ரூபன் அம்புரோஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிஐடியு நத்தம் கிளை செயலர் சந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story