பக்தர்கள் பாதயாத்திரை தொடக்கம்

பக்தர்கள் பாதயாத்திரை தொடக்கம்

பாதயாத்திரை தொடக்கம்

பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை வரத்துவங்கி உள்ளனர்.
பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை வரத்துவங்கி உள்ளனர். இந்நிலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலையோர பாதையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. பக்தர்கள் பாதயாத்திரை வருவதற்கு வசதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்- பழனி சாலை, மற்றும் தாராபுரம்-பழனி சாலைகளில் பாதயாத்திரை செல்வதற்காக, 6கோடி ரூபாய் மதிப்பில் சாலையோரம் பிரத்தியேகமாக பாதை அமைக்கப்பட்டது. பாதயாத்திரை வரும் பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாதையானது தற்போது பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்து உள்ளது.எனவே பாதையை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story