ஆறுபடை முருக பக்தர்கள் புனித யாத்திரை

ஆறுபடை முருக பக்தர்கள் புனித யாத்திரை

புனித யாத்திரை

மாந்தாங்கல் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து ஆறுபடை முருக பக்தர்களின் 27-ம் ஆண்டு புனித யாத்திரை நடைபெற்றது.
ராணிப்பேட்டை, மாந்தாங்கல் மோட்டூர் திரவுபதி அம்மன் கோவிலில் ஆறுபடை முருக பக்தர்களின் 27-ம் ஆண்டு புனித யாத்திரை நடைபெற்றது. இதையொட்டி கன்னி கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம், அன்னதானம், வாணவேடிக்கை, நாடகம் ஆகியவை நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்து கோவிலுக்கு புறப்பட்டு வருதல் மற்றும் ஆறுபடை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டனர். வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு திருத்தணி முருகன் கோவிலில் ஆறுபடை முருக பக்தர்கள் சார்பில் தங்கத்தேர் இழுத்தல் நடக்கிறது.

Tags

Next Story