சென்னிமலையில் இருந்து பழனிக்கு பக்தர்கள் வேல்வழிபாடு பயணம்

சென்னிமலையில் இருந்து பழனிக்கு பக்தர்கள் வேல்வழிபாடு பயணம்

வேலுடன் சென்ற பக்தர்கள்

சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து பழனி மலைக்கு பக்தர்கள் வேல்வழிபாடு பயணம் செய்தனர்.

வேல் வழிபாட்டு குழுவின் சார்பில், முருக பக்தர்கள் தங்கள் வீடுகளில் வழிபாடு செய்து வந்த வேலை எடுத்து வந்து சென்னிமலை முருகன் மலை கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் , முன்னாள் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் , இந்து முண்ணனியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து,இங்கிருந்து பழனிக்கு வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.

பழனியில் போகா் சன்னிதி, தண்டாயுதபாணி சன்னிதி , புலிப்பானி சித்தா் சன்னிதியில் உள்ளிட்ட இடங்களில் வேல் வழிபாடு செய்தனர். வழிபாடு நடத்தியதற்கு பின் பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் வேலை எடுத்துச் செல்கின்றனர்..

Tags

Next Story