அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கீழ்பெரும்பாக்கம் அரசு கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கீழ்பெரும்பாக்கம் அரசு கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி வளர்ச்சிக்குழு முதல்வர் கோதைநாயகி, நான் முதல்வன் திட்ட நோடல் அலுவலர் செந்தில் முருகன், வேலைவாய்ப்பு அலுவலர் ஸ்ரீதர், திறன் மேம்பாட்டு அலு வலர்கள் நடராஜன், அருண்குமார், அரசு வேலைவாய்ப்பு இணை அலுவலர் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இம்முகாமில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக 16 இணைப்பு கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களில் 2,502 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டது. முடிவில் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

Tags

Next Story