50 நாட்களில் 2 லட்சம் கையெழுத்து வாங்க திட்டம் - எம் பி தகவல்

நீட் விலக்குகாக 50 நாளில் 2லட்சம் பேரிடம் கையெழுத்து பெறவுள்ளதாக எம்.பி குமார் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரி நீட் விலக்கு நீட் இலக்கு என்னும் தலைப்பில் தமிழகம் முழுவதும் இன்று கையெழுத்து இயக்க நிகழ்வு நடத்தப்பட்டது. திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நகர மற்றும் பேரூர் கழக இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் நீட் தேர்விற்கு எதிராக குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் போஸ்டல் படிவத்தை பூர்த்தி செய்து கழக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட சார்பில் மட்டும் 50 நாட்களுக்குள் 2 லட்சம் நபர்களிடம் கையோப்பம் வாங்க திட்டமிட்டுள்ளதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்.பி.ராஜேஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story